Tuesday, February 16, 2016

பட்டதாரி ஆசிரியர் கழகமும் போராட்டத்தில் இறங்குகிறது

மாநில அரசு ஊழியர் சங்கம்ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியுடன் இணைந்துதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகமும் இன்று (பிப்.,16) முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுகிறது.

பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சுரேஷ் கூறியதாவது: 
ஆசிரியர்களுக்கான 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோவுடன் இணைந்து ஓராண்டாக போராடுகிறோம். எங்கள் கழகத்தில் 25 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். பிளஸ் பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வு நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தவிர மற்றவர்கள் மறியலில் ஈடுபடுவர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்,என்றார்.

No comments:

Post a Comment