பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாநில அளவிலான திறன் வளர்க்கும் பயிற்சி, ஈரோடு சி.எஸ்.ஐ., பள்ளியில், இரண்டாம் நாளாக நேற்று நடந்தது.
வணிகவியல், கணக்குபதிவியல் ஆசிரியர்கள், 85 பேர் இதில் பங்கேற்றனர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் பாலமுருகன் பங்கேற்று பேசினார்.
மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயந்தி, ஆசிரிய பயிற்றுனர்கள் பயிற்சி அளித்தனர். இன்று வரலாற்று ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி நடக்கிறது.
No comments:
Post a Comment