Sunday, June 29, 2014

கட்டாய பணிமாறுதலை கைவிட வேண்டும்

கட்டாயப் பணிமாறுதல் என்ற முடிவை அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:

ஆசிரியர் பயிற்றுநர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி செய்யக்கூடாது என்ற ஆணையை திரும்பப் பெற வேண்டும், 4857 ஆசிரியப் பயிற்றுநர்களுக்கும் மாறுதல் அளித்திருப்பது விதிகளுக்கு புறம்பானது. அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாநிலத் தலைவர், நிறுவனர் கே.சம்பத் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சி.மணிவண்ணன், மாநிலச் செய்தித் தொடர்பாளர் ப.ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

மாநிலப் பொதுச் செயலர் ஜெ.ரவி, பொருளாளர் கார்த்திகேசன், தலைமை நிலையச் செயலர் வேலுச்சாமி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment