Saturday, June 21, 2014

அரசாணை வெளியிட்டும் நிலுவை பணம் தாமதம்: 20 ஆயிரம் ஓய்வூதியர்கள் பாதிப்பு
அரசாணைப்படி அகவிலைப்படி நிலுவை தொகை வழங்காததால், 20 ஆயிரம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 1988 ஜூன் 1 முதல் 1995 டிச.,31 வரை அகவிலைப்படி குறைவாக வழங்கப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் பேர் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவர்களின் அகவிலைப்படியை கணக்கிட்டு, நிலுவைத்தொகையை வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, 1988 ஜூன் 1 முதல் 1995 டிச.,31 வரை, ஓய்வுபெற்றவர்கள் தற்போது உயிருடன் இருந்தால் அவர்களுக்கு அகவிலைப்படிக்கான நிலுவை தொகையை வழங்க 2013 ஆக.,23 ல் அரசாணை வெளியிடப்பட்டது. 11 மாதங்களாகியும், அரசாணை நிறைவேற்றப்படாததால், 20 ஆயிரம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பொன்னையா கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே தற்போது தள்ளாத வயதில் பல்வேறு சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இனிமேலும் காலதாமதப்படுத்தாமல், அரசாணையை நிறைவேற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும். இறந்த ஓய்வூதியர்களின் குடும்பத்தினருக்கு பண பலன் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்றார்.

No comments:

Post a Comment