கவுன்சலிங் தேதி ஒத்திவைப்பு
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல், பதவி உயர்வு
தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடக்க இருப்பதால் அதற்கான தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்க கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 16ம் தேதி முதல் 28ம் தேதி வரை பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு கவுன்சலிங் நடந்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களின் வசதிக்காக மாவட்ட மாறுதல் கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனால் மாவட்ட மாறுதலுக்கான கவுன்சலிங் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கவுன்சலிங் 28ம் தேதிக்கு பதிலாக 30ம் தேதி மற்றும் ஜூலை 1ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கும். பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கவுன்சலிங் 21ம் தேதிக்கு பதிலாக ஜூலை 2ம் தேதி நடக்கும். மேற்கண்ட இரண்டு கவுன்சலிங்கும் ஆசிரியர்களின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் தற்போது பணியாற்றும் மாவட்டத்தில் இருந்தே தங்களுக்கு விருப்பமான மாவட்டத்தை தேர்வு செய்யும் வகையில் ஆன்லைன் மூலம் நடக்கும். மற்ற கவுன்சலிங் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி வழக்கம்போல நடக்கும். இவ்வாறு இயக்குனர் இளங்கோவன் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.
143 ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி
அனைத்து மாவட்டங்களிலும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சலிங் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கவுன்சலிங்கில் 1,069 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 286 பேர் பொது மாறுதல் கவுன்சலிங் மூலம் விரும்பிய இடங்களுக்கு மாறுதல் உத்தரவு பெற்றனர். மேலும், 101 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், 143 பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல், பதவி உயர்வு
தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடக்க இருப்பதால் அதற்கான தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்க கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 16ம் தேதி முதல் 28ம் தேதி வரை பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு கவுன்சலிங் நடந்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களின் வசதிக்காக மாவட்ட மாறுதல் கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனால் மாவட்ட மாறுதலுக்கான கவுன்சலிங் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கவுன்சலிங் 28ம் தேதிக்கு பதிலாக 30ம் தேதி மற்றும் ஜூலை 1ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கும். பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கவுன்சலிங் 21ம் தேதிக்கு பதிலாக ஜூலை 2ம் தேதி நடக்கும். மேற்கண்ட இரண்டு கவுன்சலிங்கும் ஆசிரியர்களின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் தற்போது பணியாற்றும் மாவட்டத்தில் இருந்தே தங்களுக்கு விருப்பமான மாவட்டத்தை தேர்வு செய்யும் வகையில் ஆன்லைன் மூலம் நடக்கும். மற்ற கவுன்சலிங் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி வழக்கம்போல நடக்கும். இவ்வாறு இயக்குனர் இளங்கோவன் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.
143 ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி
அனைத்து மாவட்டங்களிலும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சலிங் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கவுன்சலிங்கில் 1,069 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 286 பேர் பொது மாறுதல் கவுன்சலிங் மூலம் விரும்பிய இடங்களுக்கு மாறுதல் உத்தரவு பெற்றனர். மேலும், 101 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், 143 பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment