அரசாணைகளை தமிழில் வழங்க வேண்டும்: ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை
தமிழக அரசு ஓய்வூதியர்கள் சம்பந்தமாக வெளியிடும் அரசாணை மற்றும் விவர படிவங்களை தமிழில் வழங்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி மாவட்ட தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாதாந்திர கூட்டம் புத்தூரில் நடைபெற்றது. திருச்சி மாவட்டத் தலைவர் அருள்ஜோஸ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், அரசு கருவூலங்களில் ஓய்வூதியர்களை அழைத்து அவர்களின் விவரங்கள் சரிபார்க்கும் நிகழ்வு நடைபெறும்போது, ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் படிவங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.
கிராம உதவியாளர் முதல் அடிப்படை பணியாளர்கள் பலர் ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில் ஓய்வூதியர்கள் ஆங்கிலத்தில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்ய மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கருவூல அலுவலகங்களில் படிவங்களை தமிழில் வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும். அதுபோல தமிழக அரசு ஓய்வூதியம் குறித்து வெளி யிடும் அரசு ஆணைகள் மற்றும் விளக்க கடிதங்கள் அனைத்துமே ஆங்கிலத்தில் உள்ளன. அவற்றையும் தமி ழில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் ஆர்தர் காட்வின், பொருளாளர் சந்திரசேகரன், துணைத்தலைவர் நாகப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண் டனர்.
தமிழக அரசு ஓய்வூதியர்கள் சம்பந்தமாக வெளியிடும் அரசாணை மற்றும் விவர படிவங்களை தமிழில் வழங்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி மாவட்ட தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாதாந்திர கூட்டம் புத்தூரில் நடைபெற்றது. திருச்சி மாவட்டத் தலைவர் அருள்ஜோஸ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், அரசு கருவூலங்களில் ஓய்வூதியர்களை அழைத்து அவர்களின் விவரங்கள் சரிபார்க்கும் நிகழ்வு நடைபெறும்போது, ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் படிவங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.
கிராம உதவியாளர் முதல் அடிப்படை பணியாளர்கள் பலர் ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில் ஓய்வூதியர்கள் ஆங்கிலத்தில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்ய மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கருவூல அலுவலகங்களில் படிவங்களை தமிழில் வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும். அதுபோல தமிழக அரசு ஓய்வூதியம் குறித்து வெளி யிடும் அரசு ஆணைகள் மற்றும் விளக்க கடிதங்கள் அனைத்துமே ஆங்கிலத்தில் உள்ளன. அவற்றையும் தமி ழில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் ஆர்தர் காட்வின், பொருளாளர் சந்திரசேகரன், துணைத்தலைவர் நாகப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண் டனர்.
No comments:
Post a Comment