ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் 16-ந்தேதி தொடக்கம்
பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் இடமாறுதல் பொது ‘கவுன்சிலிங்’ நடத்தப்படுகிறது.
ஆசிரியர்களின் சர்வீஸ் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் வழங்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் என அனைவரும் கலந்தாய்வு மூலம் இடமாறுதல் பெற்று செல்வர்.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் கலந்தாய்வு தாமதமாக நடைபெறுகிறது. சொந்த ஊரை விட்டு பிற மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தொடங்க கல்வி துறை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 16–ந் தேதி கலந்தாய்வு தொடங்கி 28–ந் தேதி வரை நடைபெறுகிறது. 16–ந் தேதி தொடக்க கல்வி அலுவலர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்படும். 17–ந் தேதி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் மற்றும் பதவி உயர்வு மூலம் மாறுதல் வழங்கப்படுகிறது.
19–ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல், 21–ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், 23–ந் தேதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல், பதவி உயர்வு, 24–ந் தேதி இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல், 25–ந் தேதி இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்.
26–ந் தேதி இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்,28–ந் தேதி இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் இடமாறுதல் பொது ‘கவுன்சிலிங்’ நடத்தப்படுகிறது.
ஆசிரியர்களின் சர்வீஸ் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் வழங்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் என அனைவரும் கலந்தாய்வு மூலம் இடமாறுதல் பெற்று செல்வர்.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் கலந்தாய்வு தாமதமாக நடைபெறுகிறது. சொந்த ஊரை விட்டு பிற மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தொடங்க கல்வி துறை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 16–ந் தேதி கலந்தாய்வு தொடங்கி 28–ந் தேதி வரை நடைபெறுகிறது. 16–ந் தேதி தொடக்க கல்வி அலுவலர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்படும். 17–ந் தேதி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் மற்றும் பதவி உயர்வு மூலம் மாறுதல் வழங்கப்படுகிறது.
19–ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல், 21–ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், 23–ந் தேதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல், பதவி உயர்வு, 24–ந் தேதி இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல், 25–ந் தேதி இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்.
26–ந் தேதி இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்,28–ந் தேதி இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment