Saturday, October 8, 2016

ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கோரி பள்ளி முற்றுகை

ஓமலூர் அருகேஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கோரி,பள்ளியை முற்றுகையிட்டுமக்கள் போராட்டம் நடத்தினர்.

சேலம் மாவட்டம்ஓமலூர் ஒன்றியம்புதூர்காடம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 150க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். நேற்று காலைஅப்பள்ளியில் படிக்கும் மாணவமாணவியரின் பெற்றோர், 30க்கும் மேற்பட்டோர்பள்ளியை முற்றுகையிட்டனர். பின்தலைமை ஆசிரியர் சுமதியிடம்புகார் மனு அளித்தனர். 
அதில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள பள்ளியில்கல்வியையும்ஒழுக்கத்தையும் கற்றுத்தர வேண்டிய ஆசிரியர் ஒருவரும்ஆசிரியை ஒருவரும்தவறான முறையில் செயல்பட்டுமுகம் சுளிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அவர்களைவேறு பள்ளிக்கு மாற்றநடவடிக்கை எடுக்க வேண்டும் எனதெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: 
பள்ளி நேரத்தில்இருவரும் அடிக்கடி மொபைலில் பேசிக்கொண்டிருப்பதால்மாணவமாணவியரின்,கல்வி பாதிப்பதாககுழந்தைகள் எங்களிடம் தெரிவித்தனர். இதுகுறித்துபலமுறை தலைமை ஆசிரியரிடம்வாய்மொழியாக தெரிவித்தும்பலன் இல்லை. 
அதனால்இன்று (நேற்று) பள்ளியை முற்றுகையிட்டுமனு வழங்கினோம். நடவடிக்கை இல்லை என்றால்போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment