உள்ளாட்சி தேர்தலில், இருகட்ட தேர்தல் பணிகளிலும்,குறிப்பிட்ட ஆசிரியர்களையே நியமித்துள்ளதால், கர்ப்பிணிகள்,பாலுாட்டும் ஆசிரியர்கள், அதிக பணிச்சுமையால், அவதிப்பட வேண்டியிருக்கும் என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் முழுக்க, இரண்டு கட்டமாக, உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. கோவை மாவட்டத்தில், தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் உட்பட, அரசு ஊழியர்கள், 24 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறை பரிந்துரைத்த, பட்டியல் அடிப்படையிலே, மாவட்ட நிர்வாகம், ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளை ஒதுக்கியுள்ளது.
இதில், முதற்கட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களே, இரண்டாம் கட்ட தேர்தல் பணிகளுக்காகவும், வேறு ஓட்டுச்சாவடிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், தொடர்ந்து நான்கு நாட்கள், வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு, தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்ற, நீண்டநாள் கோரிக்கை உள்ளது. இதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல்,பணிகளில் ஈடுபடுத்துவதால், பெருமளவில் பாதிக்கப்படுவதாக, பெண் ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் மைக்கேல்ராஜ் கூறுகையில், &'&'இரண்டு கட்டமாக நடக்கும் தேர்தல் பணிகளில், ஆசிரியர்களை சுழற்சி முறையில் ஈடுபடுத்தி இருக்கலாம். முதற்கட்ட தேர்தலுக்கு, 16ம் தேதியே
ஓட்டுச்சாவடி செல்லும் ஊழியர்கள், தேர்தல் முடித்து, இரண்டாம் கட்ட தேர்தலுக்காக, அடுத்த ஓட்டுச்சாவடிக்கு, முன் ஏற்பாடுகள் செய்ய, கிளம்ப வேண்டியிருக்கும். பெண் ஆசிரியர்கள் பலர்,ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட, நீண்ட துார பயண இடங்களுக்கு, தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நடப்பு கல்வியாண்டு துவக்கத்தில், பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், கல்வியாண்டு முடியும் வரை, பணியில் நீட்டிக்கப்பட்டுள்ளனர். இவர்களும், இரு கட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், கடும் பணிப்பளுவை சந்திக்க வேண்டியுள்ளது. இதை, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment