Monday, September 19, 2016

ஆதார் எண்; ’கெடு’ விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி!

பள்ளிகளில்ஆதார் முகாமே இன்னும் முடிவடையாத நிலையில்,நாளைக்குள் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்எனபள்ளிக்கல்வித் துறைகெடு விதித்துள்ளது,

ஆசிரியர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைஇலவச திட்டங்கள்ஆண்டு இறுதி தேர்வுகள்சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்தமத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
பள்ளிகளுக்கு
இதற்கு வசதியாகமாணவர்களின் ஆதார் எண்ணை கணினியில் பதிவு செய்யுமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மின்னணு கல்வி நிர்வாக மேலாண்மை திட்டமானஎமிஸ் திட்டத்திற்கும்,ஆதார் எண் பதியப்படுகிறது. அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களையும்நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்  எனஆசிரியர்களுக்குபள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர். 20லட்சத்துக்கும் மேலான மாணவர்களுக்குஇன்னும் ஆதார் எண்ணே கிடைக்கவில்லை.
இதற்காகபள்ளிகளிலேயே ஆதார் முகாமிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆதார் எண் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் ஆள் பற்றாக்குறை உள்ளதால்பல பள்ளிகளில்,உரிய நேரத்தில் முகாம்கள் நடத்தப்படவில்லை. பல இடங்களில்முகாம் நடத்துவோர் வராததால்,பெற்றோரும்மாணவர்களும்பல மணிநேரம் காத்திருந்துஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
முரண்பாடு
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில்ஆதார் எண் வழங்கும் முகாமை முறையாக நடத்த சம்பந்தப்பட்ட துறைக்கு கெடு விதிக்க வேண்டும். ஆதார் எண் வழங்கிய பின் பதிவு செய்யும்படி,பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கெடு விதிக்கலாம். ஆதார் முகாம் நடத்த தாமதமாகும் நிலையில்,எண்களை பதிவு செய்ய கெடு விதிப்பது முரண்பாடாக உள்ளது

No comments:

Post a Comment