தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், நேற்று மாலை, 5:40 மணியளவில், கெங்கவல்லி உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், மாவட்ட துணை தலைவர் அன்பழகன் தலைமையில் நடந்தது
.
அதில், புதிய கல்வி கொள்கையில் வரைவு முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்க வேண்டும்; பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும்; ஆறாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டும்; ஏழாவது ஊதியக்குழுவில் மத்திய அரசு அறிவித்துள்ள ஊதியத்தை அமல்படுத்த, தமிழகத்தில் ஊதியக்குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
அதேபோல், காடையாம்பட்டி தொடக்க கல்வி அலுவலகம் முன், ஆசிரியர்கள் நேற்று மாலை, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
No comments:
Post a Comment