திருப்போரூர்: பொது மாறுதல் மற்றும் ஒளிவு, மறைவற்ற கலந்தாய்வு கோரி, தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நடப்பு, 2016 - 17ம் கல்வி ஆண்டில், ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் ஒளிவு, மறைவற்ற கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரி, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாநிலம் தழுவிய அளவில், ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில், திருப்போரூர் வட்டார, தொடக்க கல்வி ஆசிரியர்கள், திருப்போரூர் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின்,திருப்போரூர் வட்டார நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment