கமுதி அருகே பள்ளி வளாகத்திலேயே தலைமை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ராமசாமிபட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(65). விருதுநகர் மாவட்டம் கல்லூரணி தனியார் மேல் நிலைபள்ளியில் ஆசிரியராக பணியாற்றி 6 ஆண்டுகளுக்குமுன் ஓய்வு பெற்றார். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கமுதி தனியார் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் முதல்வராக பணியற்றி வந்தார். இந்த கல்வி ஆண்டில் இன்னும் ஒரு மாதத்தில் ஒய்வு பெற இருந்தார்.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த கோவிந்தன் மாலையில் வேலை முடிந்து வழக்கம் போல் வீட்டிற்கு செல்வதற்கு பதில் பள்ளியில் இருந்தார். பின்னர் திடீரென்று பள்ளி மாடிக்குச் சென்று வகுப்பறை ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவம் குறித்து தகலவறிந்த அவரது உறவினர்கள் மற்றௌம் பள்ளி உரிமையாளர் இது குறித்து கமுதி காவல் நிலையத்தில் அளித்தனர். ஆய்வாளர் முருகன், சார்பு ஆய்வார்கள் அப்துல்லா, திலகவதி ஆகியோர் போலீஸாருடன் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பணி ஒயுவு பெரும் நிலையில் இருந்த முதல்வர் திடீரென செய்த காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ராமசாமிபட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(65). விருதுநகர் மாவட்டம் கல்லூரணி தனியார் மேல் நிலைபள்ளியில் ஆசிரியராக பணியாற்றி 6 ஆண்டுகளுக்குமுன் ஓய்வு பெற்றார். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கமுதி தனியார் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் முதல்வராக பணியற்றி வந்தார். இந்த கல்வி ஆண்டில் இன்னும் ஒரு மாதத்தில் ஒய்வு பெற இருந்தார்.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த கோவிந்தன் மாலையில் வேலை முடிந்து வழக்கம் போல் வீட்டிற்கு செல்வதற்கு பதில் பள்ளியில் இருந்தார். பின்னர் திடீரென்று பள்ளி மாடிக்குச் சென்று வகுப்பறை ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவம் குறித்து தகலவறிந்த அவரது உறவினர்கள் மற்றௌம் பள்ளி உரிமையாளர் இது குறித்து கமுதி காவல் நிலையத்தில் அளித்தனர். ஆய்வாளர் முருகன், சார்பு ஆய்வார்கள் அப்துல்லா, திலகவதி ஆகியோர் போலீஸாருடன் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பணி ஒயுவு பெரும் நிலையில் இருந்த முதல்வர் திடீரென செய்த காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment