Wednesday, May 28, 2014

ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி

ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற வரும் ஜூன் 30க்கும் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
இதுகுறித்து திருச்சி கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: 
ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கானபுதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வரும் ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் விபரங்கள் குறிப்பிடப்பட்ட படிவங்களில் பெறப்பட வேண்டியுள்ளது. இப்படிவங்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், அனைத்து கருவூலங்கள், பொதுத்துறை வங்கிகள் மூலம் ஓய்வூதி யர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப் படும்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, புகைப்படம் மற்றும் துணைவரின் பிறந்த தேதியினை உறுதி செய்யும் ஆவண நகலுடன் தொடர்புடைய ஓய்வூதி யம் வழங்கும் அலுவலகம், கருவூலம், பொதுத்துறை வங்கியில் ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர் நேரடியாகவோ அல்லது பிறர் நபர் மூல மாகவோ வரும் ஜூன் 30ம் தேதிக்குள் கொடுக்கப்பட வேண்டும். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்க ளின் நகலெடுத்து, அதனை சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் சான்றொப்பத்துடன் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஓய்வூதிய விபர படி வத்தை, புகைப்படம் மற் றும் துணைவரின் பிறந்த தேதியினை உறுதி செய்யும் ஆவண நகலுடன், ஏற் கெனவே, நேர்காணலின் போது கொடுத்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் மீண் டும் அதே படிவத்தை கொடுக்க தேவை இல்லை. எனினும், அரசு குறிப்பிட்டுள்ள கூடுதல் படிவத்தை( விருப்பப்படிவம்) பூர்த்தி செய்து கொடுக்க வேண் டும்.
நேர்காணலுக்கு இது வரை செல்லாதவர்கள் உரிய படிவங்களை ஓய்வூதியம் வழங்கும் அலுவல கம் மற்றும் கருவூலத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லதுஷ்ஷ்ஷ்.tஸீ.ரீஷீஸ்.வீஸீ ஷீக்ஷீ <ஷ்ஷ்ஷ்.ளீணீக்ஷீuஸ்ஷீஷீறீணீனீ.வீஸீ> என்ற இணையதளத்தி லிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment