Thursday, September 21, 2017

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் கூடாது: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டதால் அதை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

​ஜாக்டோ ஜியோ நீதிமன்ற உத்தரவு​
1. செப்டம்பர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை பெற்று அக்டோபர் 30 க்குள் அமல்படுத்த வேண்டும்.
2. அக்டோபர் 23 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள படும் போது அக்டோபர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை அமல் படுத்த முடியுமா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.
இல்லை எனில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குழு அறிக்கை நவம்பர் 30 க்குள் பெறப்படுமா என்பது குறித்து அக்டோபர் 23 அன்று அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
3. போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கை ஊதிய பிடித்தம் செய்யக்கூடாது
4 . வழக்கு மீண்டும் அக்டோபர் 23 அன்று தள்ளி வைப்பு.

No comments:

Post a Comment