Monday, May 2, 2016

தமிழாசிரியர்களுக்கு 10 மாத பயிற்சி விருப்பப்பட்டியல் சேகரிப்பு

மத்திய அரசு சார்பில்மைசூரில் நடக்கும்பத்து மாத மொழிக்கல்வி பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்களிடம் விருப்பப்பட்டியல் சேகரிக்கப்படுகிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில்மொழிக்கல்வியை மேம்படுத்தஆசிரியர்களுக்குபத்து மாதம் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில்இந்தியாவில் உள்ள, 20 மொழிக்கும்அந்தந்த மொழி ஆசிரியர்களை தேர்வு செய்துஏழு மையங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது.
மைசூரில் உள்ள தென்னிந்திய மொழிக்கல்வி மையத்தில்தமிழ்,தெலுங்குமலையாளம்தெலுங்கு ஆகிய மொழி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில்,தமிழ்மொழிக்கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களில், 44 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில்,பங்கேற்க விருப்பம் உள்ள தமிழாசிரியர்களின் விண்ணப்பங்களை சேகரித்துஇம்மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கும்படிஅனைத்து உயர்நிலைமேல்நிலைப்பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
வரும் ஜூலை, 4ம் தேதி தொடங்கும் இப்பயிற்சி, 2017 ஏப்ரல் மாதம் வரை நடைபெற உள்ளது. இதில்,பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு பயணப்படிஅகவிலைப்படி உள்ளிட்டவற்றையும்மண்டல மொழிக்கல்வி மையம் ஏற்றுக்கொள்கிறது.

No comments:

Post a Comment