Friday, March 4, 2016

மாணவி தலைமுடியை பிடுங்கி எறிந்த பள்ளி ஆசிரியர் மீது புகார்

பத்தாம் வகுப்பு மாணவியின் தலைமுடியைகொத்தாக பிடுங்கி எறிந்தது தொடர்பாகபள்ளி ஆசிரியர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலுார் மாவட்டம்நாட்றம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவியருக்கு,நேற்று முன்தினம் பிற்பகல், 3:00 மணிக்குதமிழாசிரியர் கணேசன்பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மூன்று பக்கங்கள்:அப்போது அவர்மாணவி சங்கவியை அழைத்துதமிழ் பாடத்தின் முக்கிய கேள்வி - பதில்கள் அடங்கிய தொகுப்பில் இருந்துமூன்று பக்கங்களை மட்டும்,ஜெராக்ஸ் எடுத்து வருமாறு சொன்னார்.
இதையடுத்துபள்ளியில் இருந்து வெளியே சென்றமாணவி சங்கவிதமிழ் பாடத்தின் முக்கிய கேள்வி - பதில்கள் அடங்கிய தொகுப்பில் இருந்துஅனைத்து பக்கங்களையும் ஜெராக்ஸ் எடுத்து வந்துஆசிரியர் கணேசனிடம் கொடுத்தார்.இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்நான் மூன்று பக்கங்களை மட்டும் தான்,ஜெராக்ஸ் எடுக்க சொன்னேன். ஆனால்அனைத்து பக்கங்களையும் எடுத்து வந்திருக்கிறாயே என்று கேட்டுசங்கவியை திட்டியதாக தெரிகிறது. பின்சங்கவியின் தலைமுடியை பிடித்து இழுத்திருக்கிறார்.
இதில்அவரது இடது முன்புறமுள்ள நெற்றியில் இருந்த தலைமுடிகொத்தாக வந்துவிட்டது. இதனால்,பயந்துபோன சங்கவிவகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார். இதனால்பதறிப்போன ஆசிரியர் கணேசன்சங்கவி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிஅவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்,இது குறித்து யாரிடம் எதுவும் சொல்லாமல்தலைமுடி இல்லாத இடத்தை மறைத்துக் கொண்டு,வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.
மாலை, 6:00 மணி வரை சிறப்பு வகுப்பு இருந்ததால்அதன் பிறகு வீட்டுக்கு சென்ற சங்கவிபள்ளியில் தனக்கு நடந்ததை பெற்றோரிடம் அழுதபடி கூறியுள்ளார். இதைக் கேட்டுஅவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணை
இதையடுத்துசங்கவியின் தந்தை அளித்த புகாரின் படிநாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்இது தொடர்பாகதிருப்பத்துார் கல்வி மாவட்ட அலுவலர் பிரியதர்ஷிணி,ஆசிரியர் கணேசன் மற்றும் மாணவிசங்கவியிடம்நேற்று விசாரணை நடத்தினார்

No comments:

Post a Comment